day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சீனாவில் வருகிற 8-ந்தேதி முதல் பயணிகளை தனிமைப்படுத்தும் உத்தரவு ரத்து: சீன தேசிய சுகாதார ஆணையம்

சீனாவில் வருகிற 8-ந்தேதி முதல் பயணிகளை தனிமைப்படுத்தும் உத்தரவு ரத்து: சீன தேசிய சுகாதார ஆணையம்

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இதையடுத்து சீன தேசிய சுகாதார ஆணையம் மக்களுக்கு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. உள்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் பயணிகள் வெளியூர் சென்று வந்தால் கட்டாய தனிமை உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதனால் சீன மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். அரசின் உத்தரவை எதிர்த்து போராட்டங்களும் நடத்தினர். ஏற்கனவே கொரோனா கட்டுப்பாடுகளால் பலத்த பொருளாதார சிக்கலை சந்தித்த சீனா, இப்போது மீண்டும் பரவி வரும் உருமாறிய கொரோனாவால் மீண்டும் சிக்கலை சந்தித்தது. எனவே மக்களின் கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள சீன அரசு முடிவு செய்தது.

முதல் கட்டமாக உள்நாட்டுக்குள் சுற்றுப்பயணம் செய்யும் பயணிகள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவை விலக்கி கொள்ள முடிவு செய்தது. அதன்படி வருகிற 8-ந் தேதி முதல் கட்டாய தனிமை உத்தரவு விலக்கி கொள்ளப்படும் என்று சீன தேசிய சுகாதார ஆணையம் அறிவித்து உள்ளது. இதையடுத்து இனி சீனாவுக்குள் பயணம் செய்பவர்கள் 5 நாட்கள் அரசு முகாம்களில் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்பதும், அதன்பிறகு வீடுகளில் 3 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் விலக்கி கொள்ளப்படுகிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!