day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா : மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தும் ராகுல் காந்தி

இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா : மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தும் ராகுல் காந்தி

ஜம்மு: இந்திய மக்கள் நம்,மண்ணில் சீனர்களை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். தொடர்ந்து இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் சீனா மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

ஸ்ரீநகரில் நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியதாவது:- சீன ராணுவம் இதுவரை இந்தியாவிலிருந்து 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் இந்திய அரசோ சீனா நம்மிடமிருந்து எதையுமே எடுக்கவில்லை என்ற மனோபாவம் கொண்டுள்ளது. முன்னர் இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்த ரோந்துப் பகுதிகள் கூட இப்போது சீனாவிடம் சென்றுவிட்டது என்று லடாக் குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சீனா நம்மிடமிருந்து எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருப்பது மிகவும் ஆபத்தானது. இந்த மறுப்பு சீனர்களுக்கு இன்னும் மூர்க்கத்தனமாக ஆக்கிரமிப்பில் முன்னேறும் நம்பிக்கை தரும். மாறாக நம் எல்லையை ஆக்கிரமிக்கும் சீனாவுக்கு நாம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும்.

இந்திய ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவுபெறும் சூழலில் அடுத்தது என்னவென்று நிருபர்கள் கேள்வி எழுப்ப, சுமார் 4000 கிலோ மீட்டர் தொடர்ந்து பயணித்துவிட்டடேன். சிறிது ஓய்வுக்குப் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!