தமிழக பள்ளிகளில் செப்டம்பா் இறுதிக்குள் காலாண்டுத் தோ்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக, இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தோ்வை நடத்திக்கொள்ளலாம் என்றும், தோ்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே முடிவு செய்துகொள்ளவும் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அரசு பள்ளிகளில் காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்கப்பட்டு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விடுமுறை முடிந்ததையடுத்து, இன்று 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வரும் 13ஆம் தேதி பள்ளிகள் திறப்படவுள்ளது.