சென்னை, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு பெய்யக்கூடும்.
மேலும், வங்கக் கடலில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.