புதுடெல்லி : கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி, சி.பி.ஐ. தொடங்கப்பட்ட நிலையில் ,இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் வைர விழா கொண்டாட்டம் நடைபெருகின்றது. வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சி.பி.ஐ.யில் சிறப்பாக பணிபுரிந்ததற்கு ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் மற்றும் சிறந்த விசாரணை அதிகாரிகளுக்கான தங்க பதக்கம் பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பதக்கங்களை வழங்குகிறார். மேகாலயா மற்றும் புனே, நாக்பூர் ஆகிய நகரங்களில் புதிதாக கட்டப்பட்ட சி.பி.ஐ. அலுவலகங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து சி.பி.ஐ.யின் வைரவிழாவை குறிக்கும் அஞ்சல் தலை, நினைவு நாணயங்களையும் வெளியிடுகிறார். மேலும், சி.பி.ஐ.யின் ‘டுவிட்டர்’ கணக்கையும் தொடங்கி வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.