day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

புதுடெல்லி : ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.

இந்த தேர்வு தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 14 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) இரவு 10.50 மணி வரை ஆன்லைனில் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!