day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஒரு மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் வரை செல்லலாம் : இலகுரக விமானத்தை கண்டுபிடித்த என்ஜினீயர்

ஒரு மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் வரை செல்லலாம் : இலகுரக விமானத்தை கண்டுபிடித்த என்ஜினீயர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எபினேசர்(வயது 29). இவர் தமிழ் வழி மூலம் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும் விமான பைலட் என்ஜினீயரிங் படிப்பை அமெரிக்காவில் படித்து முடித்த நிலையில் தற்போது தனியார் விமான பைலட்டாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நடுத்தர குடும்பத்தினரும் சொந்தமாக விமானத்தை வாங்கும் வகையில் சிறிய வகை விமானத்தை கண்டுபிடித்து விரைவில் அதை சோதனை ஓட்டமாக காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் பயன்பாடியின்றி கிடக்கும் விமான ஓடுதளத்தில் இயக்க உள்ளதாக தெரிவித்தார்.

எபினேசர் கூறுகையில்: கார் வாங்கும் நடுத்தர மக்கள் அதேவிலையில் குட்டி விமானத்தை வாங்கும் வகையில் தற்போது இந்த சிறிய இலகுரக விமானம் எடை குறைந்த அலுமினியத்தால் செய்யப்பட்டது. இதில் 3 வகையான டேங்க் பொருத்தப்பட்டு உள்ளது. ஒன்றில் உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து பயன்படுத்துவது, மற்றொரு டேங்கில் பாக்டீரியாவில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து பயன்படுத்துவது, இறுதியாக உள்ள டேங்கில் இருந்து சாதாரண பெட்ரோலை பயன்படுத்தி இயக்குவது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தற்போது ஒருவர் அல்லது 2 பேர் அமர்ந்து பயணம் செய்யும் விமானங்களை கண்டுபிடித்துள்ளேன். இந்த விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் 5 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒரு மணி நேரத்திற்குள் 100 கிலோ மீட்டர் செல்லலாம். 314 சி.சி.யுடன் 34 குதிரை திறன் கொண்ட என்ஜின் உள்ளது. மேலும் என்ஜின் நின்றாலும் மீண்டும் பறக்கும் வகையில் தயார் செய்துள்ளேன். இந்த விமானத்தை இயக்க 100 மீட்டர் ஓடுதளம் போதுமானதாகும். முற்றிலும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதால் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் இந்த விமானத்தை வாங்கலாம். இதே விமானம் வெளிநாட்டில் ரூ.40 முதல் 60 லட்சம் விலையாக இருக்கும். இந்த இலகு ரக விமானத்தை காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் இரண்டாம் உலக போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த மத்திய அரசின் விமான போக்குவரத்து துறையிடமும், உச்சிப்புளியில் உள்ள இந்திய விமான படை தளத்திலும் அனுமதி பெற்றுள்ளேன். விரைவில் போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விமான ஓடுதளத்தில் இந்த விமானத்தை இயக்கி சோதனை ஓட்டம் நடத்த உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

#

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!