day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் எலி மருந்துக்கு தடை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் எலி மருந்துக்கு தடை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில் : உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி சென்னை கீழ்ப்பாக்கம் மனநல அரசு ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள், சாணி பவுடர் போன்ற விஷத்தன்மை வாய்ந்த பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் என்னும் அபாயகரமான, விஷத்தன்மை வாய்ந்த எலி மருந்தை விற்க தடை செய்வதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

இதனையடுத்து மொத்த விற்பனை, சில்லரை விற்பனை, வாகனங்களில் எடுத்து செல்லுதல் ,ஆன்லைன் விற்பனை போன்ற அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள பல ஆஸ்பத்திரிகளில் ஆய்வு மேற்கொண்டதில் தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள் இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நிரந்தர தடை விதிக்கப்பட்டு உள்ள மருந்துகளை மேற்கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் 16 ஆயிரத்து 883 இறப்புகள் தற்கொலை மூலம் நடைபெற்றிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ‘மனம்’ என்னும் திட்டம் மருத்துவக்கல்லூரிகளில் மேலும் 36 அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளிலும் ‘மனம்’ அமைப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

#

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!