கர்நாடக மாநிலத்தில், ஓலா, ஊபர் நிறுவனங்கள் உள்ளிட்ட ஆட்டோ சேவை நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, ஊபர் போன்ற கைப்பேசி செயலி வழி வாகன சேவை நிறுவனங்களுக்கு கா்நாடக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, உத்தரவை மீறி இயக்கப்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தன. அதனை விசாரித்த நீதிமன்றம், பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கும் வரை எந்த நடவடிக்கைகயும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு மீண்டும் ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஆட்டோ சேவைகளை இயக்க அனுமதி அளித்துள்ளது. மேலும், அரசு நிர்ணயித்த தொகையைவிட 10 சதவீதம் கூடுதலாக கட்டணம் நிர்ணயித்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.