சென்னை : வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வழக்கமாக செவ்வாய்கிழமை வார விடுமுறை தினமாகும். ஆனால் தற்பொழுது , கோடை விடுமுறை என்பதால், பார்வையாளர்களுக்காக நாளை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ. 90 கட்டணமாகவும், சிறியவர்களுக்கு ரூ. 50 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளதால் உயிரியல் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.