சென்னை: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு குஷ்பு அளித்த பேட்டியில் கூறியதாவது :- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் சுயமரியாதைக்கு தொடர்ந்து போராடி வருகிறேன். பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு குரல் கொடுக்க எனக்கு ஒரு நல் வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் பயம் இல்லாமல் தங்களுக்கு நேரும் பாதிப்புகளைக் கூற வேண்டும். உங்களுக்கு குரல் கொடுக்க நான் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம், எனக்கு கடிதம் மூலம் உங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.