சென்னை: இன்று விருத்தாலசத்தில் 5 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் தான் கேள்வி எழுப்பிய போது நேரலை நிறுத்தப்பட்டதாகவும், முதல்-அமைச்சர் அளிக்கும் பதில்கள் நேரலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
மேலும் எதிர்கட்சியினர் எழுப்பும் கேள்விகளை ஒளிபரப்பாமல் அமைச்சர்கள், முதல்-அமைச்சர் பதில் சொல்வதை மட்டுமே ஒளிபரப்புவதாக குற்றம் சாட்டி அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். இது தொடர்பாக சட்டசபையில் விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறக்கூடிய கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.