day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஈரோடு தேர்தல் விவகாரத்தில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

ஈரோடு தேர்தல் விவகாரத்தில் அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

புதுடெல்லி : ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதால் தனது கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார். இந்த முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. இது தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 3-ந் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது. அ.தி.மு.க விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் கூறி உள்ளனர். இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தி திங்கட்கிழமை பதிலளிக்கிறோம் என தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.

இரட்டை இலை சின்னம் முடக்கபட்டு உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இரட்டை இலை முடக்கபடவில்லை என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி போட்டியிடலாம் என நீதிபதிகள் கூறினர். தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க மறுக்கிறது ஆனால், கடந்த முறை இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த போது, மாறுபட்ட நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் எடுத்திருந்தது. ஜூலை 11 ந்தேதி பொதுக்குழு தீர்மானத்திற்கு எந்த நீதிமன்றமும் தடைவிதிக்காததால் அது செல்லும் என இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திட தயார இருக்கிறேன். ஆனால் எனது கையெழுத்தை எடப்பாடி ஏற்க மறுக்கிறார். ஒருங்கிணைப்பாளர் என்ற தரப்பில் நான் வேட்பாளரை அறிவித்து உள்ளேன் என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. ஓபிஎஸ் யோசனை தொடர்பாக உங்களது பதில் என்ன…? இருவரும் இணைந்து தீர்வு காணும் போது என்ன பிரச்சினை இருக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில்கட்சியின் திருத்தபட்ட விதிகளின் படி ஈரோடு கிழக்கு வேட்பாளராக தென்னரசு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார் என வாதிடப்பட்டது. வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடட்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இருவருக்கும் உகந்த பொது வேட்பாளரை தேர்ந்து எடுக்க பொதுக்குழுவை கூட்டவேண்டும். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும். ஜூலை 11 ந்தேதி பொதுக்குழுவில் நீக்கப்பட்டவர்களை சேர்த்து இந்த பொதுக்குழுவை கூட்டவேண்டும் என நீதிபதிகள் கருத்து கூறினர். தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பை வாசிக்க தொடங்கினர். அதன் விவரம் வருமாறு:- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.திமுக வேட்பாளரை நிறுத்துவதற்கு இடைக்கால ஏற்பாடாக இந்த உத்தரவை பிறப்பிக்கிறோம். அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டி ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளரை தேர்ந்து எடுக்க வேண்டும். பொதுக்குழு முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரியபடுத்த வேண்டும். கட்சியில் இருந்து நீக்கபட்ட ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் இந்த இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் என கூறியுள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!