தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தேர்தலில் சின்னம் ஒதுக்கீடு செய்ய, கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர், தலைமையகத்தில் இருந்து FORM-A மற்றும் FORM-Bல் கையொப்பம் பெற வேண்டும். இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நாளை, வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைவதற்கு முன்பாகவே தலைமை கையொப்பமிட்ட FORM-A மற்றும் FORM-B யை வழங்கினால் சின்னம் ஒதுக்கப்படும். இல்லையென்றால் அதிமுக சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிவரும். நாளை மாலை 3 மணியுடன் வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடையும் நிலையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. ஆனால், அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக, அதிமுக வேட்பாளர்களின் நிலை தற்போது திண்டாட்டமாகியுள்ளது.