ரிசா்வ் வங்கி, நுகா்வோா் விலை குறியீடு (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கத்தை 4 சதவீதத்தில் வைத்திருக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பின் படி, கடந்த ஏப்ரலில் பணவீக்கம் அதிகபட்சமாக 7.79 சதவீதத்தையும், ஜூலையில் 6.69 சதவீதமாகவும், ஆகஸ்டில் 7.62 சதவீதமாகவும் இருந்து வருகிறது. இதனால், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த ரிசா்வ் வங்கி வட்டி விகிதத்தை கடந்த மாதம் உயர்த்தியதைப்போல இந்த மாத இறுதியில் மீண்டும் உயா்த்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி, வீடு மற்றும் வாகன கடன்களின் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.