பெங்களூரு: பெங்களூருவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு, அதிலும், குறிப்பாக மருத்துவ துறையில் அதீத வளர்ச்சி கண்டு வருகிறது. ஆஸ்பத்திரிகளில் ரோபோட்டிக் முறையில் பாதுகாப்பாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ரோபோக்கள் உதவியுடன் அறுவை சிகிச்சைகள் 25 சதவீதம் அதிகரித்துள்ளன.
பெங்களூருவுக்கு மருத்துவ காரணங்களுக்காக வெளிநாட்டினர் பலரும் வருகின்றனர். இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெங்களூருவின் பங்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. மேலும் ரோபோக்கள் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதால், மருத்துவ வளர்ச்சியில் பெங்களூரு முன்னேற்றம் அடைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.