day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கோவை அரசு மருத்துவமனையயில் காய்ச்சலுக்கு 25 பேர் அனுமதி

கோவை அரசு மருத்துவமனையயில் காய்ச்சலுக்கு 25 பேர் அனுமதி

கோவை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக வெயில், மழை, குளிர் என பருவநிலை மாறி மாறி வருகிறது. இதை மக்கள் பொருட்படுத்தாமல் இருப்பதால், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்று ப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் அசுத்தமான குடிநீர் குடிப்பதாலும், மழைநீரில் நனைந்த உணவுகளை உண்பதாலும் சளி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படுகிறது.வைரஸ் கிருமிகளாலும், கொசு உற்பத்தி அதிகரிப்ப தாலும், மலேரியா, டெங்கு போன்ற பெரிய அளவிலான வியாதிகள் பரவும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது: காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களை தனி வார்டில் அனுமதித்து சகிச்சை அளித்துவருகிறோம். இதுவரை பெரிதாக யாருக்கும் எந்த விதமான பதிப்பும் ஏற்படவில்லை. டெங்குவுக்கு 5 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 20 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்று சூழ்நிலைகளில், குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், ஆஸ்துமா போன்ற தொந்தரவு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும. தூங்கச் செல்லும் முன்பு சுடுதண்ணீரில் வாய் கொப்பளிக்கும்போது, பெரும் பாலான தொண்டை பிரச்சிகளை தவிர்க்கலாம். பள்ளி குழந்தைகள் முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.ஐஸ், குளிர்பானங்கள், குளிர்ச்சியான உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பதால் காய்ச்சலில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!