அருணாச்சல பிரதே மாநிலத்தில் உள்ள லெபா-ராடா மாவட்டத்தில் உள்ள பாசார் நகரில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தொிவித்துள்ளது.
இதேபோன்று மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக் அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.