தமிழகத்தில் குரூப்-1 பிரிவில் துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் என மொத்தம் 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வை எழுத 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு இன்று (சனிக்கிழமை) தொடங்கியுள்ளது. பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடக்கிறது. சென்னை, மதுரை,கோவை, திருச்சி உள்பட 38 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.