கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்புகொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அனைத்து மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர்களுக்கும் மீன்வளத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது . நாளை 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் சூறைக்காற்று 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை கடலில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.