தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. டிச.8-ம் தேதி வரை இப்பணி நடைபெறுகிறது. இந்நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்தல், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வழங்கலாம். தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.