day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வட தமிழக கடலோர பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’ !

வட தமிழக கடலோர பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’ !

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அதையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுவடைந்து தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை தமிழகம் – புதுவை இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழையும், ஒருசில மாவட்டங்களில் விட்டு, விட்டும் மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.எனவே, வட தமிழக கடலோர பகுதிகளுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!