தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைபெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை கனமழை பெய்தது. சைதாபேட்டை, மாம்பலம், சூளைமேடு, கோடம்பாக்கம், நூங்கம்பாக்கம், மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல், புரசைவாக்கம், கிண்டி உள்பட நகரின் பல்வேறு இடங்களில் அதிகாலை கனமழை பெய்தது.