day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடையை நீட்டிப்பு

மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடையை நீட்டிப்பு

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தைபோல உள்ளதால் மொபைல் பே செயலிக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இரு செயலிகளின் வணிக சின்னங்களும், முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக கூறி, மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்ததுடன், இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குவது தொடர்பா பதிலளிக்கும்படி கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தபோது, கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் பதிலளிக்க அவகாசம் கோரபட்டதையடுத்து விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அதுவரை பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!