நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த படம் முடிந்த பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதில் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த தகவலை லைகா தலைமை நிர்வாகி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.