உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் சேவை பல நாடுகளில் இன்று பிற்பகல் முதல் முடங்கியுள்ளது. இதுத்தொடர்பாக, வாட்ஸ்ஆப் பயனர்களில் சிலர் டிவிட்டரில் சுட்டிக்காட்டி புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வாட்ஸ்ஆப் சேவையை சரிசெய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், சேவை முடங்கியதற்கான காரணம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.