ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தனது 61ஆவது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரகனி போன்ற நடிகர்களும் இணைந்துள்ளனர். 1987ஆம் ஆண்டு பஞ்சாப்பில் நடந்த வங்கி கொள்ளை உண்மை சம்பவத்தை மையமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், அஜித்குமார் தற்போது தனது 62-வது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் நடிகர்களுக்கான தேர்வு தொடங்கியுள்ள நிலையில் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகலாம் என கூறப்படுகிறது.