மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசுநடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, சிறார் திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் திரையிடவேண்டும். திரைப்படங்களைத் திரையிடுவது தொடர்பாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்ட திரைப்பட சுற்றறிக்கை தொடர்பாக, நாளை (அக்டோபர் 13) அன்று “தி ரெட் பலூன்” திரைப்படம் திரையிடப்படும். இப்படம் பிரஞ்சு மொழியில் ஆஸ்கார் விருது பெற்ற குறும்படமாகும். மேலும், அரசு கொடுத்துள்ள படங்களை மட்டுமே திரையிட வேண்டும். ஆவணப்படுத்தப்பட்ட படத்திலிருந்து மாணவர் வாரியாக கற்றல் மதிப்பீடு செய்யப்படும். திரையிடலுக்கு தனியாக ஒரு ஆசிரியரை நியமித்து, தனியாக வகுப்பறையை தயார் செய்ய வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வியின் மாநிலத்திட்ட இயக்குனர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.