தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்த அதிமுக கட்சியின் பொதுக்குழு காரணமாக பல்வேறு மாற்றங்கள் கட்சியில் நடந்ததுடன், அதிமுக பொதுக்குழு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பழனிசாமி திருப்பதியில் சாமி தரிசனம் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி வருகிறது.