அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு முந்தைய நிலையே அதிமுகவில் தொடரும் என்று ஆகஸ்ட் 17-ஆம் தேதி தீர்ப்பு வழங்கி இருந்தார். தனி நீதிபதியின் இந்த தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பை வழங்கியது. அதில், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு நீதிபதிகளின் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.