உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ் பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாட தேர்வு கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக தமிழ் பாடத்திட்டங்களை சரிவர பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்து முறைப்படுத்தி தமிழ் தேர்வுகளை நடத்த வேண்டும். சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என தகவல் வெளியானதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.