day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 இன்று முதல் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சீனிவாசா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 வரையிலும், ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையிலும் உயர்த்தி உள்ளது. மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளன. லிட்டருக்கு ரூ.4 வரை விலையை உயர்த்த பல தனியார் பால் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. முன்னதாக இந்தாண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்திய நிலையில் தற்போது மூன்றாவது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். அண்மையில் பால் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு காரணமாக தமிழக அரசின் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!