ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தர்ஹால் பகுதியில் பார்கல் என்ற இடத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட ராணுவ முகாம் அமைத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில், எல்லைத் தாண்டி ஊடுருவ முயன்ற சிலரை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்தி நிறுத்தியபோது, வீரர்களை நோக்கி அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து, பதில் தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள் 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளனர். எனினும், பயங்கரவாதிகள் திடீரென தற்கொலைப்படை தாக்குதலில் 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, அந்த இடத்தில் கூடுதல் ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.