சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் புதிய பாடத்திட்டத்துக்கான ஒப்புதல் பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் பொறியியல் பாடத்திட்டம் 20 ஆண்டுக்குப் பின் மாற்றப்பட உள்ளது. இதில், மாணவர்களின் ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், தனித்திறனை வெளிக்கொணருதல், தொழில்முனைவோரை உருவாக்கும் போன்ற வகையில் பாடத்திட்டம் அமையயுள்ளது.
இந்த புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டில் அமலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.