ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி நேற்று மாலை தைவான் தீவின் தலைநகர் தைபேவுக்கு சென்றுள்ளார். தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்த நாட்டைச் சேர்ந்த தலைவா் சென்றாலும் அதற்கு சீனா தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அமெரிக்காவின் இந்த செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதன்படி, அவரது வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தைவான் வான்பகுதியில் 20க்கும் மேற்பட்ட போா் விமானங்களை சீனா பறக்கவிட்டதாக தைவான் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தைவான் எல்லையையொட்டிய பகுதிகளில் சீனா தனது ராணுவத் தளவாடங்களைக் குவித்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ள இந்த போர் ஒத்திகையில், இன்று தைவானை சுற்றி வளைப்பது போல போர் பயிற்சி செய்து வருகிறது. முன்னதாக, 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தாலும், சீன அரசின் கட்டுப்பாட்டிலேயே தைவான் செயல்பட்டு வருகிறது. தைவானை, சீனாவுடன் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.