day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இன்று புதிதாக மேலும் 18,313 பேருக்கு கொரோனா; நேற்றை விட 3500 பேர் அதிகம்

இன்று புதிதாக மேலும் 18,313 பேருக்கு கொரோனா; நேற்றை விட 3500 பேர் அதிகம்

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், நேற்று புதிதாக 14 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று (ஜூலை மாதம் 27ஆம் தேதி) மேலும் புதிதாக 18 ஆயிரத்து 313 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 38 ஆயிரத்து 764ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்து 026 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதித்தவர்களில் புதிதாக 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 20 ஆயிரத்து 742 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 571-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,02,79,61,722 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமையான நேற்று மட்டும் 27,37,235 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!