சிபிஎஸ்இ பாடத்திட்டம் மூலம் 12ஆம் தேர்வு மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை மாதம் 22ஆம் தேதி) வெளியிடப்பட்டது. தேர்வில் 92.71 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 91.25% மாணவர்களும் 94.54% மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும், திருவனந்தபுரம் மண்டலம் 98.82% தேர்ச்சியுடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. 98.16% தேர்ச்சியுடன் பெங்களூரு மண்டலம் இரண்டாமிடத்தையும் 97.79% தேர்ச்சியுடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 7% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கல்லூரி மாணவர் சேர்க்கை என தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அதன்படி, அடுத்த 5 நாட்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் தமிழக அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம்.