சென்னை, பல்லவன் இல்லத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரைச் சந்தித்து அரசாங்க போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர். அதில், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்கக் கோரியும், ஓய்வூதியர்களின் ஓய்வூதிய உயர்வு அகவிலைப்படி உயர்வினை உடனடியாக வழங்கக் கோரி வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.