உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புந்தேல்கண்ட் நான்கு வழி விரைவுச் சாலையை நாட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். விவசாயம், வணிகம் உள்ளிட்ட துறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை ஏழு மாவட்டங்கள் வழியாக லக்னோ-ஆக்ரா இடைப்பட்ட 296 கிலோ மீட்டரை இணைக்கிறது. கடந்த 28 மாதத்தில் உத்தரபிரதேசத்தில் உருவாகியுள்ள நான்காவது சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது.