சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள 5 புதிய தொழிற்பேட்டைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய தொழிற்பேட்டைகளின் தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் தண்டரையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஜவுளி பூங்காவில் கட்டப்பட்டுள்ள பொது வசதி கட்டடத்தையும் அவர் திறந்து வைத்தார்.