day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு

பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு

தமிழக ஆந்திரா எல்லைப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக தற்பொழுது திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு மாராப்பட்டு தரைப்பாலத்தில் செல்லக்கூடிய தண்ணீரில், தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கலக்கிறது. இதனால், பாலாற்றின் தண்ணீரில் நுரை பொங்கி, மாசடைந்து செல்வதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாலாற்றின் தண்ணீரில் நேரடியாக தோல் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் கலப்பதால் மாசுபடுத்தப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தொழிற்சாலைகளை மூட வேண்டுமென அந்தபகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!