இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,303 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. ஆனால் நேற்று முன்தினம் 2,483 மற்றும் நேற்றைய பாதிப்பான 2,927 விட அதிகமாகும். இதனால், இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,68,799ஆக் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 2,563 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,28,126ஆக உள்ளது. தற்போது 16,980 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தவிர, கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,23,693 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 186,40,75,453 பேர் கொரோனா தடுப்பூசி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று மத்திய சுகாதரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.