சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2022ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.மர்லிமாவுக்கு வழங்கப்பட்டது. திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2021-–22ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதல்வரால் வழங்கப்படும் எனவும், இவ்விருது பெறும் சாதனையாளருக்கு 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், அதற்கான தகுதிகளும் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டன. அதில் ஒருவர், குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியாக இருந்திருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, விண்ணப்பித்தவர்கள் குறித்து ஆய்வுசெய்த தமிழகஅரசு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை அ.மர்லிமா என்பரை சிறப்பு திருநங்கை விருதுக்காக தேர்வு செய்தது. இதற்கான விழா தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இந்த விருது, அ.மர்லிமாவின் 25 ஆண்டுகால சேவையை பாராட்டி வழங்கப்பட்டது. இவ்விழாவில், விருதுக்கான ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.