கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்றுமுதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் நேரடியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பக்தர்களை தங்கவைத்து தரிசனத்திற்கு அனுமதிக்கும் வைகுண்ட காம்ப்ளக்சில் 30 அறைகளும் நிரம்பி வழிகிறது. இதனால், பக்தர்கள் 40 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று மட்டும் 88,748 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.