டெல்லியில் தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் முன்னாள் பிரதமர்களின் அபூர்வப்படங்கள், குறிப்புகள், அவர்களின் சாதனைகள் குறித்து விளக்குவதற்காக அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்த் அவ்வளாகத்தில் ரூ.271 கோடி செலவில் 10,975.36 ச. மீ. பரப்பளவில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 14 முன்னாள் பிரதமர்களின் அபூர்வப்படங்கள், குறிப்புகள், அவர்களின் சாதனைகள் உள்பட அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார்.