மானாமதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அகரத்தில் மேற்கொள்ளப்படுவரும் மூன்றாம்கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அதன் முழு விவரங்களை தெரிந்துகொள்வதற்காக எலும்புகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கீழடி, அகரம் மற்றும் கொந்தகையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில், கீழடி கொந்தகையில் ஒரே குழியின் அருகருகே 6 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.