132பேரை பலிகொண்ட சீனாவின் விமான விபத்துக்கு பிறகு சீன விமானிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க அந்தநாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது எனவும் மேலும், விபத்துக்கு துணை விமானி காரணமாக இருக்கலாம் என்ற செய்தியும் உலா வருகிறது. இந்த வதந்திகளை சீனாவின் சிவில் விமான போக்குவரத்து நிர்வாகம் மறுத்துள்ளது. இதனையடுத்து, சம்பவம் குறித்து விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரி ஒருவர் பேசுகையில், விபத்துக்கான காரணம் மற்றும் தன்மை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய முதன்மை விமானி, இதற்கு முன்னதாக 6,709 மணிநேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். அவருடன் துணை விமானிகளாக இருந்தவர்களும் முறையே 31,769 மணிநேரம் மற்றும் 556 மணிநேரம் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்கள். இந்த வதந்திகள் சில பொது பாதுகாப்பு துறைகளில் இருந்து வந்தவை, இந்த வதந்திகள் தவறானவை. இந்த வதந்திகள் நடந்து வரும் விசாரணையில் பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கும், சட்ட மீறலைக் குறிக்கலாம். விபத்துக்கான காரணத்தை விரைவில் கண்டறிய முயற்சிப்போம். சட்ட நடைமுறைகளின்படி உரிய தகவல்களை வெளியிடுவோம். விமானிகள், விமான பணிப்பெண்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர்களின் உளவியல் அழுத்தத்தை நிர்வகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விமான போக்குவரத்து நிர்வாகம் எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.