day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

2 நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல்

2 நாட்களாக ஒரே விலையில் பெட்ரோல்

பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளாதால் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருதாகவும், விலையேற்றத்துக்கு மத்திய அரசை குறைக்கூறுவது தவறான கண்ணோட்டம் எனவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், கடந்த இரு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஏப்ரல் 6ஆம் தேதி விலையிலேயே விறபனைச் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமில்லாமல் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் 85 காசுகளுக்கும், டீசல் 100 ரூபாய் 94 காசுகளுக்கும் விற்பனை
செய்யப்படுகிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!