ஜனவரி 19ஆம் தேதி இங்கிலாந்தில் ‘எக்ஸ்இ’ என்ற புதிய வவை கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எக்ஸ்இ உருமாறிய வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. ஒமைக்ரான் வைரசில் உள்ள பிற திரிபை விட ‘எக்ஸ்இ’ வகை 10 சதவீதம் அதிக வேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ‘எக்ஸ்இ’ வகை வைரசால் இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், மும்பையில் ’எக்ஸ்இ’ வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக மும்பை மாநகராட்சி நேற்று தெரிவித்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் மும்பை வந்த ஆடை அலங்கார பெண் கலைஞருக்கு மார்ச் 2ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ‘எக்ஸ்இ’ வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது. இதையடுத்து, மும்பையில் கண்டறியப்பட்டது ‘எக்ஸ்இ’ வகை வைரஸ் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.