ஜேஇஇ முதற்கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் முடிவடைந்த நிலையில், விரைவில் 2ஆம் கட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நாள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜேஇஇ முதன்மைத் தோ்வு (அட்வான்ஸ்டு) தேதிகளில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த முதற்கட்ட நுழைவுத் தோ்கள் வரும் ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தேர்வுகள் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இது குறித்த சந்தேகங்களுக்கு jeemain@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என தேசிய முகமை தெரிவித்துள்ளது.